பதிவு செய்த நாள்
14 பிப்2018
00:38
சென்னை:‘‘நடப்பு
நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில், இந்தியன் வங்கி
செயல்பாட்டு லாபம், 1,209.22 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,’’ என,
வங்கியின் மேலாண் இயக்குனர், கிஷோர் கரத் கூறினார்.
வங்கியின்,
மூன்றாவது காலாண்டு விபரங்கள் குறித்து, அவர், சென்னையில்,
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:வங்கியின்
செயல்பாட்டு லாபம், 2017 டிசம்பருடன் முடிந்த காலாண்டில், 18.42
சதவீத வளர்ச்சியோடு, 1,209.22 கோடி ரூபாயை அடைந்து உள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டில், இதே கால கட்டத்தில், 1,021.16 கோடியாக இருந்தது
.
வங்கியின்
நிகர லாபம், காலாண்டு முடிவில், 303.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2016 – 17ம் நிதியாண்டில், இதே கால கட்டத்தில், 373.47 கோடி ரூபாயாக
இருந்தது. இந்த குறைவுக்கு, மூலதனங்கள் மீதான சந்தை மதிப்பு சரிவு
போன்ற சில அம்சங்களே காரணம். எனினும், டிசம்பருடன் முடிந்த
ஒன்பது மாத காலத்தில், நிகர லாபம், 3.78 சதவீதம் வளர்ச்சி கண்டு,
1,127.01 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிசம்பருடன் முடிந்த காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 4,903.08 கோடி ரூபாயை எட்டியுள்ளது.முந்தைய
ஆண்டு இது, 4,557.26 கோடி ரூபாயாக இருந்தது. இது போல், ஒன்பது மாத
காலத்தில் வருவாய், 14,565.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|