பதிவு செய்த நாள்
15 பிப்2018
00:32
புதுடில்லி:ஜி.எஸ்.டி.,
தாக்கம் குறித்து, சர்வதேச கணக்காளர் கூட்டமைப்பான, ஐ.எப்.ஏ.சி.,
சார்பில், ஹாரிஸ் போல் நிறுவனம், வலைதளத்தில் கருத்து கணிப்பு
நடத்தியது.
இதில் பங்கேற்ற, 1,200 பேரில், 64 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் வர்த்தக சூழல் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். வணிகத்தில், ஜி.எஸ்.டி.,யை கணக்கிட, அனுபவமுள்ள கணக்காளர்கள் தேவை என, 74 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
சிறிய,
நடுத்தர நிறுவனங்கள், மறைமுக வரிகள் என்ற தொல்லையில் இருந்து
விடுபட்டுள்ளன. ஜி.எஸ்.டி.,யால், அவற்றின் வரி நடைமுறைகளில், அதிக
வெளிப்படைத் தன்மை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு, வர்த்தக விரிவாக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளை திட்டமிட, ஜி.எஸ்.டி., துணை புரிகிறது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துாணாக விளங்குகின்றன.
இந்நிறுவனங்கள், 2020ல், ஜி.டி.பி.,யில், 50 சதவீத பங்களிப்பை
வழங்கும் என, எதிர்பார்க்கப்
படுகிறது.அடுத்த, 10
ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற
தொழில்நுட்பங்களால், கணக்காளர்கள் பிரிவில் பணி வாய்ப்பு
குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|