பதிவு செய்த நாள்
15 பிப்2018
00:35
புதுடில்லி:‘‘வரும்
நிதியாண்டில் அமலாக உள்ள, நீண்ட கால மூலதன ஆதாய வரியால், தேசிய
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு பாதிப்பு
ஏற்படாது,’’ என, ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும்
மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர், ஹேமந்த் காண்ட்ராக்டர் தெரிவித்து
உள்ளார்.
அவர் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில், ‘மீண்டும்
நீண்ட கால மூலதன ஆதாய வரி அறிமுகப்படுத்தப்படும்’ என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், ஏப்., முதல், பங்கு முதலீட்டில், 1
லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட லாபத்திற்கு, 10 சதவீதம் மூலதன ஆதாய வரி
செலுத்த வேண்டும்.
இதன் காரணமாக, தேசிய ஓய்வூதிய திட்டத்தின்,
பங்கு முதலீட்டு வருவாயில் பாதிப்பு ஏதும் இருக்காது. ஏனெனில், இந்த
முதலீடுகள், வரி விலக்கு சலுகை பெற்ற, தேசிய ஓய்வூதிய திட்ட
அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே சமயம், வரி
விலக்கு சலுகை இல்லாத, ஓய்வூதியம் சாரா கணக்கின் கீழ் கிடைக்கும்,
பங்கு முதலீட்டு வருவாயில் சிறிதளவு தாக்கம் ஏற்படலாம்.
இப்பிரிவில் மேற்கொள்ளும் முதலீடுகள் குறைவானவை என்பதால்,
தாக்கமும் குறைவாகவே இருக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2 கோடி சந்தாதாரர்களின், 2.25 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இலக்கு எட்டப்படும்
‘அடல்
பென்ஷன் யோஜனா’ திட்டத்தில், மார்ச்சுக்குள், 1 கோடி
சந்தாதாரர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 88 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். இத்திட்டத்தின் கீழ்,
4,000 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. வரும் நிதியாண்டில்,
இத்திட்டத்தில் மேலும், 50 லட்சம் சந்தாதாரர்களை சேர்ப்போம் என்ற
நம்பிக்கை உள்ளது.
ஹேமந்த் காண்ட்ராக்டர்
தலைவர், ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|