மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயரும் 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம் ரூ.6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
00:23

மும்பை:'அடுத்த மூன்று ஆண்டுகளில், 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம், இரண்டரை மடங்கு உயர்ந்து, 6.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்' என, ஆய்வொன்றில்
தெரியவந்துள்ளது.

வலைதளங்கள் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவோர், 'ஆன்லைன்' நுகர்வோர் ஆவர். அத்தகையோரின் செலவினம் குறித்து, கூகுளுடன் இணைந்து, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:

இந்தியாவில், வலைதளம் வாயிலான மின்னணு வர்த்தகம் பரவலாகி வருகிறது. இதில், நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களின் பயன்பாடும் பெருகியுள்ளன.
அதனால், வலைதளங்கள் வாயிலான நுகர்வோரின் செலவு, 2020ல், தற்போது உள்ளதை விட, இரண்டரை மடங்கு உயர்ந்து, 4,000 கோடி டாலரில் இருந்து, 10 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, ரூபாய் மதிப்பில், 6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

இதில், ஆடைகள், ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், பெரும் பங்கு வகிக்கும்.இப்பிரிவில், நுகர்வோரின் செலவினம் தற்போது, 1,800 கோடி டாலராக உள்ளது. இது, 2020ல், 4,000 -- 4,500 கோடி டாலராக உயரும்.இதே காலத்தில், சுற்றுலா மற்றும் ஓட்டல்களுக்கு, வலைதளம் வாயிலாக பணம் செலுத்துவது, 1,100 கோடி டாலரில் இருந்து, 2,000 கோடி டாலராக அதிகரிக்கும்.

மின்னணு ஊடகங்களுக்கு, நுகர்வோர் செலவிடுவது, 20 கோடி டாலரில் இருந்து, 57 கோடி டாலராக வளர்ச்சி காணும்.குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள், அவற்றில் பெரும்பாலான மொழிகளில் கிடைக்கும் தகவல்கள் போன்றவற்றால், வலைதளங்களை பார்வையிடுவோர்
அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக, நான்கு ஆண்டுகளில், வலைதளங்களை பயன்
படுத்துவோர் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 43 கோடியாக பெருகி உள்ளது.

இது, மேலும் வளர்ச்சி காண, சிறிய நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் 35 வயதிற்கும் மேற்பட்டோர் துணை புரிவர்; வலைதள பொருட்களை வாங்குவதில், இத்தகையோரின் பங்கு, 2020ல், முறையே, 2.5 மற்றும் 3 மடங்கு அதிகரிக்கும்.பெருநகரங்களை தாண்டி, சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளதால், வலைதளங்களில் அதிகமானோர் பொருட்கள் வாங்குகின்றனர்.

வலைதளங்களில் பொருட்கள் வாங்கினாலும், 20 சதவீதம் பேர் தான், மொத்த செலவில், 60 - -65 சதவீதம், மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வளர்ச்சி

நுகர்வோர்கள், வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று, தற்போது முதல்
பொருளை வாங்குவது வரை முன்னேறியுள்ளனர். அடுத்து, அவர்கள் சர்வசாதாரணமாக,
வலைதள பொருட்கள் வாங்குவோராக மாற வேண்டும். இப்படி, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால், வலைதள வர்த்தகம் வளர்ச்சி காணும்

நிமிஷா ஜெயின்

இயக்குனர், பி.சி.ஜி., இந்தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)