பதிவு செய்த நாள்
17 பிப்2018
00:11
மும்பை : ‘ரப்பர் பொருட்கள் உற்பத்திக்கு அவசியமான, ‘கார்பன் பிளாக்’ மூலப்பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள, அதிக பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்டும்’ என, இந்திய ரப்பர் தொழில் துறை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, இந்த கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர், விக்ரம் மாகர் கூறியதாவது: சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், ‘கார்பன் பிளாக்’ பொருட்களுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவற்றின் விலை உயர்ந்து, உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ரப்பர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 1,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இதன் காரணமாக, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பை இழப்பர். மேலும், இத்துறையில் மாதந்தோறும், 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். கார்பன் பிளாக் பொருளின் விலை, ஆறு மாதங்களில், 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், மூன்று மாதங்களில் மட்டும், 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கார்பன் பிளாக் பொருள், ரசாயனம், பெயின்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில், மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|