பதிவு செய்த நாள்
18 பிப்2018
05:17
புதுடில்லி : வலைதளங்களில், ‘பிட்காயின்’ போன்ற மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு, ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இதில், எண்ணற்ற கணினி ஒருங்கிணைப்புகள் வாயிலாக, மின்னணு கணக்கு புத்தகம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதாவது, எந்தவொரு பரிவர்த்தனை விபரமும், மையத் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு, வினியோகிக்கப்படுவதில்லை.
பரிவர்த்தனை விபரங்கள், ஒட்டுமொத்த கணினி ஒருங்கிணைப்பிற்கு இடையே தான் நடக்கின்றன.இதன் காரணமாக, கணினி நாசகாரர்கள், கணினி மையத் தொகுப்பில் புகுந்து, தகவல்களை திருடும் வாய்ப்பு குறைவு.
‘‘அதனால், பாதுகாப்பான பிளாக் செயின் தொழில்நுட்பத்தை, இணையம் சார்ந்த நில பத்திரப்பதிவு, மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றில் பயன்படுத்துவது தொடர்பாக, ‘நிடி ஆயோக்’ பரிசீலிக்கிறது,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரியின் சிறப்பு அதிகாரி, ஆலேக் ஷரன் தெரிவித்து உள்ளார்.
‘‘பத்திரப்பதிவு திட்டத்திலும், நில உரிமைக்கான ஆவண பராமரிப்பிற்கும் உள்ள இடைவெளி தான், நில மோசடிக்கு வித்திடுகிறது. இதற்கு, பிளாக் செயின் முற்றுப்புள்ளி வைக்கும்,’’ என, ஆலோக் ஷரன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|