பதிவு செய்த நாள்
19 பிப்2018
02:38
பி.பி.எப்., முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக, பி.பி.எப்., தொடர்பான சட்டம் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்கள் தொடர்பான தனித்தனி சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட, இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, பழைய திட்டத்தில் உள்ள சலுகைகள், முக்கிய அம்சங்கள் புதிய சட்டத்திலும் தொடரும் என்பதோடு, புதிதாக சில பலன்களும் சாத்தியமாக உள்ளன.தற்போதைய சட்டத்தின் படி, பி.பி.எப்., கணக்கை துவக்கிய தினத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக கணக்கை முடித்துக் கொள்ள வழியில்லை. எனினும் புதிய சட்டத்தில், மருத்துவ தேவை மற்றும் உயர்கல்வி போன்ற காரணங்களுக்காக, பி.பி.எப்., சிறுசேமிப்பு திட்ட முதலீடுகளை முன்னதாகவே விலக்கி கொள்ள அனுமதிக்கப்படலாம்.
தற்போதையை நிலையில், பெற்றோர் மட்டுமே மைனர்கள் சார்பில் கணக்கு துவக்க முடியும். தாத்தா, பாட்டிகள் கூட இவ்வாறு கணக்கு துவங்க அனுமதி இல்லை. எனினும் இனி, எந்த ஒரு பாதுகாவலரும் மைனர்கள் பெயரில் பி.பி.எப்., கணக்கு துவங்க அனுமதிக்கும் வாய்ப்பு உருவாகும். மைனர்கள் கணக்கில் நாமினேஷன் வசதியும் அளிக்கப்படும். பி.பி.எப்., மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக முறையீடு செய்து தீர்வு காணும் வசதி அறிமுகம் செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சார்பில் கணக்கு துவக்கப்படவும் தெளிவாக நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|