பதிவு செய்த நாள்
22 பிப்2018
02:48
புதுடில்லி : மத்திய அரசின், தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த, 10 கோடி குடும்பங்களுக்கு, மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில், ஒரு குடும்பம் ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, காப்பீட்டு வசதி பெறலாம். இதன் மூலம், 50 கோடி பேர் பயன் பெறுவர்.உலகின் மிகப்பெரிய, இந்த காப்பீட்டு திட்டத்திற்கான ஆண்டு பிரீமியம், 1,000 -– 1,200 ரூபாயாக இருக்கும் என்ற மதிப்பீடு, தற்போது, 900 -– 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, ‘நிடி ஆயோக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம் தொடர்பான பயிலரங்கில்,திரிபுரா தவிர்த்து, அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.இத்திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கான ஆண்டு பிரீமிய தொகையில், 60 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும். எஞ்சியதை, மாநில அரசுகள் அளிக்கும். சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கு, 90 சதவீதம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வரும், 2018 -– 19ம் நிதியாண்டில், இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|