பதிவு செய்த நாள்
22 பிப்2018
02:50
புதுடில்லி : டாடா சன்ஸ் நிறுவன தலைவர், என்.சந்திரசேகரன், பதவி ஏற்று ஓராண்டாகி இருக்கும் நிலையில், இக்கால கட்டத்தில், பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.இவர் பதவியேற்ற போது, ஐரோப்பாவில், டாடா ஸ்டீல் பிரிவு பாதிப்பில் இருந்தது. உள்நாட்டில், டாடா டெலி கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள், இழப்பில் இருந்தன. இப்பிரச்னைகளுக்கு, அவர் குறுகிய காலத்தில் தீர்வு கண்டுள்ளார்.அதன் விபரம்:l ஜப்பானின், என்.டி.டி., டோகோமோ உடனான, 120 கோடி டாலர் வழக்கை முடித்து வைத்தார்l கடன் மற்றும் ரொக்கமில்லா ஒப்பந்தம் மூலம், டாடா டெலி சர்வீசஸ் மொபைல் போன் சேவையை, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு மாற்றி, தினசரி இழப்பை தடுத்தார்l ஐரோப்பிய டாடா ஸ்டீல் வர்த்தகத்தை, ஜெர்மனியின், தைசன்க்ருப் உடன் இணைக்க ஒப்புதல் வழங்கினார்l டாடா ஸ்டீல் லாபம், மூன்றாம் காலாண்டில், ஐந்து மடங்கு உயர்ந்து, 1,136 கோடி ரூபாயாக அதிகரிப்புl டாடா மோட்டார்சில், 14 அடுக்கு நிர்வாகத்தை, 5 ஆக குறைத்து, 1,500 பணிகளை நீக்கி, உயரதிகாரிகள் ஊதியத்தை குறைத்தார்l இதனால், ஐந்து காலாண்டுகளில், முதன்முறையாக, 2017 அக்., – டிசம்பரில், 184 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. முந்தைய ஆண்டில், 1,052 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்ததுl பயணியர் வாகன பிரிவின் சந்தை பங்கு, 5.2லிருந்து, 6 சதவீதம்; வர்த்தக வாகன பிரிவு, 44.4லிருந்து, 47 சதவீதமாக உயர்ந்ததுl 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, டி.சி.எஸ்., பங்குகள் திரும்பப் பெறப்பட்டனஓராண்டில், டாடா குழுமத்தைச் சேர்ந்த, 22 பட்டியல் நிறுவனங்கள் மதிப்பில், 1.45 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|