பதிவு செய்த நாள்
22 பிப்2018
02:51
புதுடில்லி : பொதுத் துறையைச்சேர்ந்த, இந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம், தபால் சேவை, சிறு சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், அதன் சேவைகள் குறித்து, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அதன் வலைதளத்தில், ‘ஆன் லைன் சர்வே’ எனப்படும், பிரத்யேக கருத்துக் கணிப்பு பிரிவை துவக்கி உள்ளது.இந்த கருத்துக் கணிப்பு, பிப்., 16 – மே 5 வரை நடைபெறும். வலைதளத்தில், வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் குறித்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.சேவை குறைபாடு தொடர்பாகவும் புகார் அளிக்கலாம். இதன் மூலம், அவற்றுக்கு தீர்வு கண்டு, சேவையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.‘வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், நிறுவனத்தின் சேவையை மேம்படுத்திக் கொள்ள உதவும்’ என, இந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், பல ஆண்டுகளாக, தபால் சேவை, பணப் பரிவர்த்தனை, சிறு சேமிப்பு, கட்டணச் சேவை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|