நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாதுநிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.95 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.95 ...
இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ஜி.எஸ்.டி., கணக்கு விபரங்களே போதும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
02:29

புதுடில்லி, பிப். 23–‘‘வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கும் போது, பிணைக்கு பதி­லாக, ஜி.எஸ்.டி., பரி­வர்த்­தனை விப­ரங்­களை ஏற்­கும் காலம் வந்து கொண்­டி­ருக்­கிறது,’’ என, ‘இன்­போ­சிஸ்’ செயல்­சாரா தலை­வர், நந்­தன் நிலே­கனி தெரி­வித்து உள்­ளார்.டில்­லி­யில், இந்­திய நிர்­வா­கக் கூட்­ட­மைப்பு விழா­வில், அவர் பேசி­ய­தா­வது:தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தின் வணிக விப­ரங்­கள் அனைத்­தும், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லில் அடங்கி விடு­கிறது. இனி, இந்த விப­ரங்­கள் தான், ஒரு நிறு­வ­னத்­திற்கோ அல்­லது ஒரு நுகர்­வோ­ருக்கோ, பிணை­யின்றி கடன் வழங்­க­லாமா, கூடாதா என்­பதை தீர்­மா­னிக்க, வங்­கி­க­ளுக்கு உத­வப் போகின்­றன.இந்­தி­யா­வில், முதன்­மு­றை­யாக, இந்த நடை­முறை அறி­மு­க­மாக உள்­ளது.தற்­போது, 1 கோடி நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,திட்­டத்­தின் கீழ் உள்­ளன.இவை, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் விப­ரங்­களை, வங்கி அல்­லது நிதி நிறு­வ­னங்­க­ளி­டம் கடன் பெறு­வ­தற்கு பயன்­ப­டுத்­த­லாம்.மத்­திய அரசு, ஜி.எஸ்.டி.,கணக்கு தாக்­கல் நடை­மு­றையை, மேலும் சுல­ப­மாக்க உள்­ளது. அத­னால்,இனி வர்த்­தக நடை­மு­றை­யில், ஓர் அங்­க­மா­கவே, கணக்கு தாக்­கல் மாறிவிடும்.ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில், ஒரு நிறு­வ­னம்அளிக்­கும் விலைப்­பட்­டி­யல் விப­ரங்­க­ளின்­படி, தன்­னிச்­சை­யா­கவே, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் தயா­ராகி விடும். இந்த புதிய, எளி­மை­யான கணக்கு தாக்­கல்நடை­முறை, ஏப்.,முதல் அம­லுக்கு வரு­கிறது. வர்த்­த­கர்­களும், நிறு­வ­னங்களும், புதிய நடை­மு­றைக்கு மாற, அரசு அவ­கா­சம் அளிக்­கும்.இந்த நடை­மு­றை­யில், நிறு­வ­னங்­கள் மட்­டு­மின்றி, நுகர்­வோ­ரும் பயன் பெறு­வர். நுகர்­வோர் செலுத்­தும், ஜி.எஸ்.டி., தொடர்­பான விப­ரங்­க­ளின்­படி, அவர்­க­ளுக்கு, வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் பிணை­யின்றி கடன் வழங்­கும். அது போல, பொருட்­களை விற்­கும் நிறு­வ­னங்­களும், ஜி.எஸ்.டி., விப­ரங்­க­ளின்­படி, பிணை­யின்றி கடன் பெற­லாம்.சொத்­து­கள் எது­வும் இல்­லை­யென்­றா­லும், ஒரு நிறு­வ­னம் அல்­லது நுகர்­வோ­ரின், ஜி.எஸ்.டி.,விப­ரங்­களே, கட­னுக்­கான தகு­தி­யாக எடுத்­துக் கொள்­ளப்­படும்.இதன் மூலம், குறு, சிறு நிறு­வ­னங்­கள் அதி­க­ள­வில் பய­ன­டை­யும்; நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி பெறும். மொத்­தத்­தில், எதிர்­கால வர்த்­த­கம், உங்­கள் தர­வு­களை பயன்­ப­டுத்தி, உங்­க­ளுக்கே பொருட்­களை விற்­ப­தாக இருக்­காது. மாறாக, உங்­கள் தர­வு­களை பயன்­ப­டுத்தி, நீங்­களே உங்­கள் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­திக் கொள்­வ­தாக இருக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

ரொக்கம் குறைவான சமூகம்இந்­தி­யா­வில், ‘கிரெ­டிட் கார்டு’ பயன்­பாடு, குறிப்­பிட்ட இலக்கை எட்ட, 18 ஆண்­டு­கள் ஆனது. இந்த இலக்கை, யு.பி.ஐ., எனப்­படும், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், 18 மாதங்­களில் எட்டி விட்­டது. ஒரு மாதத்­தில், ‘யு.பி.ஐ.,’ சார்ந்த பணப் பரி­வர்த்­த­னை­கள், 1 கோடி­யாக, டிசம்பரில் உய­ரும். இந்­தியா, ரொக்­கப் பயன்­பாடு குறை­வான சமூ­கத்தை நோக்கி செல்­கிறது.நந்தன் நிலேகனி செயல்சாரா தலைவர், ‘இன்போசிஸ்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)