பதிவு செய்த நாள்
25 பிப்2018
04:33
புதுடில்லி : சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வே’ ரசீது எனப்படும், மின் வழிச் சீட்டு நடைமுறை, ஏப்., 1 முதல், மீண்டும்அறிமுகமாக உள்ளது.இதற்கு, பீஹார் துணை முதல்வர், சுஷில் குமார் மோடி தலைமையில், டில்லியில் நடைபெற்ற, மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, சுஷில் குமார் மோடி கூறியதாவது:கடந்த, 1ல் அறிமுகமான, ‘இ – வே’ திட்டம், துவக்க நாளிலேயே, வலைதளத்தில், லட்சக்கணக்கானோரின் பதிவை ஏற்கும் திறனின்றி முடங்கியது. அதனால், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதையடுத்து, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், மின் வழிச் சீட்டுகளை கையாளும் திறனைஉயர்த்தும் பணி நடக்கிறது.ஏப்., 1ல், மீண்டும் மின் வழிச் சீட்டு நடைமுறையை அமல்படுத்தலாம் என, தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதை ஏற்பது என, இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதற்கு, மார்ச், 10ல் நடைபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்., 1 முதல், மின் வழிச் சீட்டு மீண்டும் நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநிலங்கள் இடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட சரக்கு போக்கு வரத்துக்கு, மின் வழிச் சீட்டு அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|