முதலீட்டாளர் – கடன்தாரர் நலன் கருதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீதான புகாரை விசாரிக்க மத்தியஸ்த அமைப்பு உருவாக்கம்முதலீட்டாளர் – கடன்தாரர் நலன் கருதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கி சாரா ... ... இழப்பை தவிர்க்க என்ன வழி? இழப்பை தவிர்க்க என்ன வழி? ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
04:42

கடந்த வாரம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்­டி­யில், சரி­வு­டன் வர்த்­த­கம் நடை­பெற்­றது. இருப்­பி­னும், வார இறுதி நாட்­களில் சரி­வில் இருந்து, ஏறத்­தாழ, 200 புள்­ளி­கள் வரை உயர்ந்து, சிறிய சரி­வில், 104.79 புள்­ளி­க­ளு­டன் வியா­பா­ரம் முடி­வுற்­றது. இந்த வாரம், சில முக்­கிய பொரு­ளா­தார கார­ணி­கள் வெளி­யாக உள்­ளன. இவற்­றின் முடி­வு­கள், சந்­தை­யின் போக்கை நிர்­ண­யிக்­கும். இதில், வரும் புதன் அன்று, இந்­தி­யா­வின், மூன்­றாம் காலாண்டு, ஜி.டி.பி., விப­ரம் வர உள்­ளது. இதில், 6.3ல் இருந்து, 6.7 சத­வீ­த­மாக வளர்ச்சி இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்­பிற்கு பின், ஆறு மாதங்­களில், 6 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­துள்­ளது. வியா­ழன் அன்று, பிப்­ர­வரி மாதத்­தின் வாகன விற்­பனை விப­ரம் வெளி­வர உள்­ளது.மாருதி சுசூகி, டாடா மோட்­டார்ஸ் ஆகி­ய­வற்­றின் கார் விற்­பனை, ஜன­வ­ரியை விட, பிப்­ர­வ­ரி­யில் அதி­கம் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கன­ரக வாகன விற்­ப­னை­யும் அதி­க­ரித்­தி­ருக்­கும் என, தெரி­கிறது.ஜன­வ­ரி­யில், இரு சக்­கர வாகன விற்­பனை, 30 – -35 சத­வீ­தம் வரை வளர்ச்சி கண்­டி­ருந்­தது. இருப்­பி­னும், பிப்­ர­வ­ரி­யில், இவ்­வ­ளர்ச்சி, 30 சத­வீ­தம் தான் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவை தவிர, பி.எம்.ஐ., எனப்­படும், தொழில் மற்­றும் சேவை துறை வளர்ச்சி விகித குறி­யீடு குறித்த அறி­விப்­பும் வெளி­யாக உள்­ளது. வெள்­ளி­யன்று, ஹோலி பண்­டி­கையை முன்­னிட்டு, சந்­தை­க­ளுக்கு விடு­மு­றை­யா­கும். திரி­புரா மாநில தேர்­தல் முடிவு, சனிக்­கி­ழமை வெளி­யாக உள்­ளது. இத­னால் ஏற்­படும் மாற்­றங்­கள், அடுத்த வாரம் சந்­தை­யில் எதி­ரொ­லிக்­கும்.அமெ­ரிக்க ரிசர்வ் வங்கி, இந்­தாண்டு எத்­தனை முறை வட்டி விகி­தத்தை உயர்த்­தக் கூடும் என்­பது பற்றி, சர்­வ­தேச சந்­தை­யில் விவா­தம் நடை­பெ­று­கிறது. மூன்று முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கருத்து, பர­வ­லாக உள்­ளது.அடுத்த மாதம், 20, -21ம் தேதி­களில், வட்டி விகித கூட்­டம் நடை­பெற உள்­ளது. அமெ­ரிக்க அர­சின் கரு­வூல ஆதா­யம் உயர்ந்து வரு­கிறது. இந்த ஆதா­யம், 3 சத­வீ­தத்­திற்கு மேல் உயர்ந்­தால், மீண்­டும் பங்­குச் சந்­தை­கள் சரிய வாய்ப்­புள்­ளது. தற்­போது, ஆதாய அளவு, 2.94 சத­வீ­த­மாக உள்­ளது. புதன் அன்று, அமெ­ரிக்க ரிசர்வ் வங்­கி­யின் புதிய தலை­வர் பொறுப்­பேற்க உள்­ளார். நிப்டி ரெசிஸ்­டன்ட், 10,640 – - 10,735; சப்­போர்ட், 10,345 ஆகும்.

கமாடிட்டி சந்தை

கச்சா எண்­ணெய் விலை, இரு வாரங்­க­ளாக அதி­க­ரித்து வரு­கிறது. லிபியா நாட்­டின் எண்­ணெய் உற்­பத்தி, தொழில் நுட்ப கோளாறு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­கா­லி­க­மாக, தின­சரி உற்­பத்தி, 70 ஆயி­ரம் பேரல்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.இதன் கார­ண­மாக, கச்சா எண்­ணெய் விலை உயர்ந்­துள்­ளது. கடந்த வாரம், அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் இருப்பு குறித்த தக­வல் வெளி­யா­னது. அதில், கச்சா எண்­ணெய் இருப்பு அளவு, 1.6 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது, 1.8 மில்­லி­யன் பேரல்­க­ளாக அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­விரு நிகழ்­வு­க­ளால், கச்சா எண்­ணெய் விலை உயர்ந்­துள்­ளது. ஒபெக் உறுப்பு நாடு­கள் தங்­க­ளது மொத்த உற்­பத்­தியை, 1.8 மில்­லி­யன் பேரல்­கள் குறைத்­துள்­ளன. இதை, இந்­தாண்டு டிசம்­பர் வரை நீட்­டித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இருப்­பி­னும், பெருகி வரும் அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் உற்­பத்தி, ஒபெக் நாடு­க­ளுக்கு சவா­லாக அமைந்­துள்­ளது. பேக்­கர் ஹக்ஸ் நிறு­வ­னத்­தின் கணக்­குப்­படி, செயல்­பாட்­டில் உள்ள எண்­ணெய் குழாய்­க­ளின் எண்­ணிக்கை, 799 ஆக உயர்ந்­துள்­ளது. தின­சரி உற்­பத்­தி­யா­னது, 10.24 மில்­லி­யன் பேரல்­க­ளா­கும்.கடந்த வியா­ழன் அன்று, சவுதி அரே­பி­யா­வின் எண்­ணெய் வளத் துறை அமைச்­சர், உல­கின் எண்­ணெய் இருப்பு அளவு தற்­போது குறைந்து கொண்டு வரு­வ­தாக கூறி­ இருந்­தார். கச்சா எண்­ணெய் இருப்பு அளவு குறைந்­தால், ஏதே­னும் ஒரு அசா­தா­ரண சூழல் நிக­ழு­மா­யின், சந்­தை­யில் தட்­டுப்­பாடு ஏற்­ப­டக்­கூ­டும் என, சந்­தை­யில் அச்­சம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, கச்சா எண்­ணெய் விலை உயர்வை கண்­டது. ஜன­வ­ரி­யில், 1 பேரல் கச்சா எண்­ணெய் விலை, 66.65 டாலர் வரை உயர்ந்­தது. அதன் பின் ஏற்­பட்ட சரி­வால், 1 பேரல் விலை, 58 டாலர் வரை தாழ்ந்­தது. தற்­போது உயர்ந்து, 1 பேரல், 63.60 டால­ராக உள்­ளது.
தங்கம்
கடந்த வாரம், சர்­வ­தேச சந்­தை­யி­லும், பொருள் வாணிப சந்­தை­யி­லும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் சரி­வில் வர்த்­த­க­மா­யின. அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்­வ­தன் கார­ண­மா­க­வும், அரசு கரு­வூல பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம் உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­களில் சரிவை ஏற்­ப­டுத்­தின. மூன்று ஆண்­டு­க­ளாக, 10 ஆண்டு கால பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம், 2.5 சத­வீ­தத்­திற்­கும் கீழாக இருந்து வந்­தது. இது, கடந்த வாரம், 2.94 சத­வீ­த­மாக உயர்ந்து, உச்­சத்தை எட்­டி­யது. இத­னால், தங்­கம் மீதான முத­லீட்டு ஆர்­வம் குறைந்­தது. மேலும், பங்­குச் சந்­தை­களும் சரிவை சந்­தித்­தன. உள்­நாட்டு சந்­தை­யி­லும், நீண்ட கால பத்­தி­ரங்­க­ளான, 2024ம் ஆண்டு பாண்டு, 7.94 சத­வீ­தம்; 2030ம் ஆண்டு பாண்டு, 8.04 சத­வீ­த­மாக உள்­ளது. கடந்த புதன் அன்று வெளி­வந்த, அமெ­ரிக்க ரிசர்வ் வங்­கி­யின் வட்டி விகித கூட்­டத்­தின் சுற்­ற­றிக்கை, வரும் காலங்­களில் வட்டி விகி­தம் உயர்த்த வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கிறது. இது­வும் தங்­கம் விலைக்கு பாத­க­மாக அமைந்­தது. சீன புத்­தாண்டை முன்­னிட்டு, கடந்த வியா­ழன் வரை, இரு வாரங்­கள், சீன சந்­தை­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டி­ருந்­தது. தற்­போது, சீனா­வில் இயல்பு நிலை வந்த சூழ­லில், ஆப­ரண தேவைக்­கான தங்­கம் கொள்­மு­தல் துவங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும் நம் சந்­தை­யில் தங்­கம் விலை, ரூபாய் மதிப்பு சரி­வால் உயர்ந்து காணப்­ப­டு­கிறது. சமீ­பத்­தில், ரூபாய் மதிப்பு, 63.50லிருந்து, 65 வரை சரி­வை கண்­டது. இத­னால், தங்­கம் விலை உயர்ந்­துள்­ளது.
செம்பு
மூன்று வாரங்­க­ளாக தொடர்ந்து சரி­வில் இருந்து வந்த செம்பு விலை, கடந்த வாரம் சிறிய அள­வில் மீண்­டது. கடந்த ஆண்டு டிசம்­பர் முதல், 10 சத­வீத விலை உயர்­வும், கடந்த வாரம், 35 சத­வீத விலை­யேற்­ற­மும் நிகழ்ந்­தது. எலக்ட்­ரிக் கார்­கள் பயன்­பாட்­டிற்கு வரும் என்ற எதிர்­பார்ப்­பால், செம்பு தேவை அதி­க­ரிக்­கும் என, கணிக்­கப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக, செம்பு விலை உயர்ந்து வரு­கிறது. வரும், 2020ல் இந்த வகை கார்­கள் விற்­ப­னைக்கு வரும் என, தெரி­கிறது. ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் நடத்­திய கருத்­துக் கணிப்­பில், செம்பு உற்­பத்­தியை விட தேவை அதி­க­ரித்து, 45 ஆயி­ரத்து, 500 டன் பற்­றாக்­குறை ஏற்­படும் என, தெரி­ய­வந்­துள்­ளது. இதற்கு முன், 2017, நவம்­ப­ரில் நடத்­திய ஆய்­வில், 93 ஆயி­ரம் டன் தேவையை விட, உற்­பத்தி அதி­க­மாக இருக்­கும் என, தெரிய வந்­தது.சீனா­வில், சுற்­றுச்­சூ­ழல் சீர்­கேடு கார­ண­மாக, சில செம்பு சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­ட­தும், விலை உயர்­வுக்கு கார­ண­மா­னது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)