‘9,500 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆபத்தானவை’‘9,500 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆபத்தானவை’ ... குறைந்தவிலை ஸ்மார்ட் போன் : ஏர்டெல் - கூகுள் ஒப்பந்தம் குறைந்தவிலை ஸ்மார்ட் போன் : ஏர்டெல் - கூகுள் ஒப்பந்தம் ...
வரும் மாதங்களில் ரூ.25,000 கோடி திரட்ட... பங்கு வெளியீட்டில் களமிறங்க தயாராக உள்ள 25 நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
01:12

புதுடில்லி : வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 25 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட, இரண்டு டஜ­னுக்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் தயா­ராக உள்ளன.இவற்­றில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதியை, அவற்­றின் விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்­கும், நடை­முறை மூல­தன தேவை­க­ளுக்­கும் பயன்­ப­டுத்த உள்­ள­தாக, ‘செபி’யிடம் அளித்­துள்ள ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.வாய்ப்புகள்ஒரு சில நிறு­வ­னங்­கள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இடம் பெறு­வ­தன் மூலம், ‘பிராண்டு’ மதிப்பை உயர்த்­திக் கொள்ள திட்­ட­மிட்­டுள்ளன. இதன் மூலம், எதிர்­கால வளர்ச்சி வாய்ப்­பு­களை நழுவ விடா­மல் பயன்­ப­டுத்­திக் கொள்ள விரும்­பு­கின்றன.ஒரு சில நிறு­வ­னங்­கள், தற்­போ­துள்ள முத­லீட்­டா­ளர்­கள் பயன் பெற வேண்­டும் என்ற நோக்­கில், பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்ள உள்ளன. இந்­நி­று­வ­னங்­களின் பங்­கு­கள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இடம் பெற்­றால், முத­லீ­டு­களை திரும்­பப் பெறும் வாய்ப்­பும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு கிடைக்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இது குறித்து, சந்­தை­யா­ளர்­கள் கூறி­ய­தா­வது:பங்­குச் சந்­தை­யின் எழுச்­சி­யும், அதைத் தொடர்ந்து, பங்­கு­களில் முத­லீடு செய்ய வரு­வோ­ரின் ஆர்­வ­மும், பல நிறு­வ­னங்­க­ளுக்கு, பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கும் துணிவை அளித்­துள்ளன.பார்­பிக்யு நேஷன் ஆஸ்­பி­டா­லிட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ், பாரத் டைன­மிக்ஸ் மற்­றும் இந்­தி­யன் ரினீ­ப­விள் எனர்ஜி டெவ­லப்­மென்ட் ஏஜன்சி ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டிற்கு, செபி ஏற்­க­னவே ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.இவை தவிர, பந்­தன் பேங்க், இன்­தோஸ்­டார் கேப்­பி­டல் பைனான்ஸ், ரைடெஸ், மிஷ்ரு தத்து நிகாம், நசாரா டெக்­னா­ல­ஜிஸ், ரூட் மொபைல் ஆகிய நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டிற்கு செபி­யின் அனு­மதி கோரி காத்­தி­ருக்­கின்றன.காத்திருப்புபங்கு வெளி­யீட்­டில் இறங்க உள்ள நிறு­வ­னங்­கள், செபி­யி­டம் அளித்­துள்ள ஆவ­ணங்­களின் படி, அவை, 25 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­கிறது.ஏற்­க­னவே, நியூ­ஜென் சாப்ட்­வேர் டெக்­னா­ல­ஜிஸ், ஆம்­பர் என்­டர்­பி­ரை­சஸ் இந்­தியா உள்­ளிட்ட, ஐந்து நிறு­வ­னங்­கள், பங்­கு­களை வெளி­யிட்­டு உள்ளன.ஒரு டஜ­னுக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி காத்­தி­ருக்­கின்றன.மேலும் பல நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டிற்கு ஆயத்­த­மாகி வரு­கின்றன. ஏப்­ரல் முதல், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் அதி­கம் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

புதிய உச்சம்கடந்த, 2017, பங்கு வெளி­யீட்­டிற்கு மிகச் சிறந்த ஆண்­டாக விளங்­கி­யது. மொத்­தம், 36 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 67 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டிக் கொண்­டன. புதிய பங்கு வெளி­யீ­டு­களில் இது, உச்­ச­மா­கும். இதற்கு முன், 2010ல், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், அதி­க­பட்­ச­மாக, 37 ஆயி­ரத்து, 535 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டதே சாத­னை­யாக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)