பதிவு செய்த நாள்
01 மார்2018
07:43
புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பல்வேறு, ‘டிபாசிட்’டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:பல்வேறு டிபாசிட்டுகளின் வட்டி விகிதம், 0.10 – 0.50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 7 – 45 நாட்கள் வரையிலான டிபாசிட்டுக்கு அளிக்கப்பட்ட, 5.25 சதவீதம் வட்டி, தற்போது, 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மேலும், ஓராண்டு டிபாசிட்டுக்கான வட்டி விகிதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 6.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2 – 10 ஆண்டுகள் வரையிலான டிபாசிட்டுக்கான வட்டி விகிதம், 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, இதற்கு முன், 6 சதவீதமாக இருந்தது.மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், 6.5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகித உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இவ்வங்கி, ஏற்கனவே, 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட டிபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|