பதிவு செய்த நாள்
01 மார்2018
07:44
புதுடில்லி : பிப்ரவரியில், நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, நான்கு மாதங்களில் இல்லாத சரிவை கண்டிருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டின் தயாரிப்புத் துறைக்கு, பிப்ரவரியில் புதிய, ‘ஆர்டர்’கள் வருவது குறைந்துள்ளது. அதே சமயத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்கள், ஓராண்டில் இல்லாத அளவிற்கு, தயாரிப்பு பொருட்கள் விலையை உயர்த்தின. இதன் காரணமாக, தேவை குறைந்து, தயாரிப்புத் துறை உற்பத்தி சரிந்துள்ளது.இத்துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், நிக்கி பி.எம்.ஐ., குறியீடு, பிப்ரவரியில், 52.1 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இது, நான்கு மாதங்களில் காணாத இறக்கமாகும். ஜனவரியில், இக்குறியீடு, 52.4 ஆக இருந்தது.பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பிப்ரவரியில், தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|