கடன் சுமையால் ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நோட்டீஸ் கொடுத்ததுகடன் சுமையால் ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நோட்டீஸ் கொடுத்தது ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.25 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.25 ...
5 துறைகளில் இரட்டை இலக்கம்; 2வது இடத்தில் சீனா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் ஆசிய – பசிபிக் நாடுகளில் இந்தியா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
07:47

புதுடில்லி, மார்ச் 1–ஆசிய – பசிபிக் பிராந்­தி­யத்­தில், இந்­தாண்டு, பல்­வேறு துறை­களில் பணி­யாற்­று­வோ­ருக்கு, அதிக ஊதிய உயர்வு வழங்­கு­வ­தில், இந்­தியா முத­லி­டத்­தை­யும், சீனா இரண்­டா­வது இடத்­தை­யும் பிடிக்­கும் என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.டில்­லி­யைச் சேர்ந்த, ‘ஏ ஆன் இந்­தியா கன்­சல்­டிங்’ நிறு­வ­னம், ஆசிய – பசி­பிக் பிராந்­தி­யத்­தில், தொழில் முறை சேவை­கள், வாகன தயா­ரிப்பு உட்­பட, 20 துறை­க­ளைச் சேர்ந்த, 1,000 நிறு­வ­னங்­களில், ஊதிய உயர்வு குறித்து, ஆய்வு மேற்­கொண்டு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­தி­யா­வில், 2017ல் ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் சரா­சரி ஊதிய உயர்வு, 9.3 சத­வீ­த­மாக இருந்­தது.இது, இந்­தாண்டு, 9.4 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ஆசிய – பசிபிக் பிராந்­தி­யத்­தி­லேயே, ஊதிய உயர்வு விகி­தத்­தில், இந்­தியா, முத­லி­டத்­தில் உள்­ளது. சீனா, 6.4 சத­வீ­தத்­து­டன், இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது.சிறப்­பாக செயல்­படும் பணி­யா­ளர்­க­ளுக்கு அதிக ஊதி­யம் வழங்க, நிறு­வ­னங்­கள் முன்­னு­ரிமை அளிக்­கின்றன. நிறு­வ­னத்­தின் வளர்ச்­சிக்கு உத­வும் ஊழி­யர்­க­ளுக்கு, சரா­ச­ரி­யாக, 15.4 சத­வீத ஊதிய உயர்வு கிடைக்­கிறது. இது, சாதா­ரண ஊழி­யர் பெறும் ஊதிய உயர்வை விட, 1.9 மடங்கு அதி­கம்.அதே சம­யம், அதிக ஊதி­யம் பெறு­வோர் வளர்ச்சி விகி­த­மும் குறைந்து வரு­கிறது. நிர்­வா­கத்­தில், தலைமை பொறுப்­பில் உள்­ளோர் மற்­றும் மூத்த நிர்­வா­கி­களின் ஊதிய விகி­தம் குறைந்­துள்­ளது.இந்­தாண்டு, அக்­க­வுன்­டன்ட், வழக்­க­றி­ஞர், நிர்­வாக ஆலோ­ச­கர், முத­லீட்டு மேலா­ளர் உள்­ளிட்­டோர் அடங்­கிய, தொழில் முறை சேவை­கள் துறை­யில் தான், அதி­க­பட்­ச­மாக, 10.6 சத­வீத ஊதிய உயர்வு இருக்­கும்.இந்த வகை­யில், ஐந்து துறை­களின் ஊதிய உயர்வு, இரட்டை இலக்க சத­வீ­தத்தை கொண்­டி­ருக்­கும்.இந்­திய பொரு­ளா­தா­ரம், பர­வ­லாக மேம்­பாடு கண்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. இருந்­தும், கடந்த நிதி­யாண்டை போன்றே, இந்­தாண்­டின் ஊதிய உயர்வு இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. நிறு­வ­னத்­தின் அளவு, அதன் வர்த்­த­கம், தேவைப்­படும் திற­மை­யான பணி­யா­ளர்­கள் உள்­ளிட்ட அம்­சங்­கள் தான், ஊதிய உயர்வை தீர்­மா­னிக்­கின்றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)