பதிவு செய்த நாள்
02 மார்2018
00:07
புதுடில்லி:‘‘வங்கி கடன் பெறும் நடைமுறைகளை கடுமையாக்குவதால், தொழில் துறையினர் மூலதன தேவைகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்,’’ என, பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர், அனில் கேதான் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, கணக்கு தணிக்கையில், எப்படி தெரியாமல் போனது என்பது தான், என் கேள்வி.விஸ்வரூபமெடுத்துள்ள வங்கி மோசடிகளால், கடன் பெறும் நடைமுறைகளும், விதிமுறைகளும், தேவையின்றி கடுமையாக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
அத்தகைய நிலையில், நிறுவனங்கள், மூலதன தேவைகளுக்காக கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரும். இது, சுலபமாக தொழில் துவங்குவதற்கு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, எதிரான நிலையை உண்டாக்கி விடும்.அதனால், ரிசர்வ் வங்கி, கடன் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதை விட, அந்தந்த வங்கிகளின் கணக்கு தணிக்கை குழு, மோசடி பரிவர்த்தனைகளை எப்படி கவனிக்க தவறியது என்பதை கண்டுபிடிக்கலாம்; அவற்றில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கலாம். கணக்கு தணிக்கை
நடைமுறைகளை கடுமையாக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|