பதிவு செய்த நாள்
07 மார்2018
00:18
புதுடில்லி:தனியார் துறையைச் சேர்ந்த, பந்தன் வங்கி, பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வங்கி, பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 2,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுஉள்ளது.
இது, வங்கித் துறையில் மேற்கொள்ளும், மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என, வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டக்
மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்டுமேன் சாக்ஸ்
செக்யூரிட்டிஸ், ஜே.எம்.பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல்
செக்யூரிட்டீஸ், ஜே.பி.மார்கன் இந்தியா ஆகியவை, இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன. விரைவில், பங்கு வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறுங்கடன்
நிறுவனமான, பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு,
2014ல், ரிசர்வ் வங்கி, வங்கி உரிமம் வழங்கியது. இதையடுத்து, பந்தன் வங்கி உருவானது. இந்தியாவில், முதன்முதலாக, குறுங்கடன் துறையில் இருந்து,
வங்கித் துறைக்கு வந்த பெருமை, பந்தன் வங்கிக்கு உண்டு.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|