பதிவு செய்த நாள்
07 மார்2018
00:22
புதுடில்லி:‘‘சிறப்பு
பொருளாதார மண்டலங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில், 52
சதவீதம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை,’’ என, மத்திய
வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி,
பார்லி.,யில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:மத்திய
அரசு, 45,629 ஹெக்டர் நிலப் பரப்பில், 375 சிறப்பு பொருளாதார
மண்டலங்கள் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது. இதில், 93 சதவீதம் தரிசு
நிலமாகும்.
தற்போது, 21,873 ஹெக்டரில், சிறப்பு பொருளாதார
மண்டலங்கள் செயல்படுகின்றன. 23,779 ஹெக்டர் நிலம், இன்னும்
பயன்படுத்தப்படாமல் உள்ளது.சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகின்றன.
இவற்றில்,
பல்வேறு காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளை துவக்குவது
தாமதமாகிறது. 2017 செப்., நிலவரப்படி, சிறப்பு பொருளாதார
மண்டலங்களின் ஏற்றுமதி, 2.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம்
அரக்கு பள்ளத்தாக்கில் விளையும், அரக்கு காபிக்கு, புவிசார்
குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர்
தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|