பதிவு செய்த நாள்
08 மார்2018
00:19

புதுடில்லி:சந்தர் டெக்னாலஜிஸ் நிறுவனம், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி’ சந்தர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
‘பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, பழைய கடன்களை செலுத்தவும்; வணிக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்’ என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகியவை மேற்கொள்ள உள்ளன.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வெளியீடு முடிந்த பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதைத் தொடர்ந்து, பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|