கட்டுமான துறையில் டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ்கட்டுமான துறையில் டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையில்... இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை அமெரிக்காவின், ‘பிட்ச்’ நிறுவனம் உயர்த்தும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2018
00:27

புதுடில்லி:நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, பர­வ­லாகி வரும் நிதிச் சேவை­கள், ஜி.எஸ்.டி., உள்­ளிட்ட சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டை­யில், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்­பீட்டை உயர்த்த, அமெ­ரிக்­கா­வின், ‘பிட்ச்’ நிறு­வ­னத்­தி­டம், மத்­திய அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘பிட்ச்’ உலக நாடு­களின் கடன் தகு­தியை மதிப்­பிட்டு, அதற்­கான குறி­யீட்டை வழங்­கு­கிறது. சர்­வ­தேச அள­வில், முத­லீ­டு­கள் தொடர்­பாக முடி­வெ­டுக்க, இந்த குறி­யீடு உத­வு­கிறது.இதன்­படி, ‘பிட்ச்’ நிறு­வ­னம், 2006ல், இந்­தி­யா­வுக்கு, பி.பி.பி., என்ற குறி­யீட்டை வழங்­கி­யது. இது, மிகக் குறைந்த முத­லீட்­டிற்­கான குறி­யீடு என்ற போதி­லும், ஸ்தி­ரத்­தன்­மையை குறிக்­கிறது.

ஆலோசனை

‘இந்த குறி­யீட்டை உயர்த்த வேண்­டும்’ என, இந்­தியா வலி­யு­றுத்தி உள்­ளது.இது தொடர்­பாக, டில்­லி­யில் நேற்று, ஆலோ­சனை கூட்­டம் நடை­பெற்­றது. இதில், ‘பிட்ச்’ தர நிர்­ணய பிரிவு இயக்­கு­னர், தாமஸ் ரூக்­மாக்­கர், மத்­திய பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை செய­லர், சுபாஷ் சந்­திர கர்க், தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், அர­விந்த் சுப்­ர­ம­ணி­யன், முதன்மை பொரு­ளா­தார ஆலோ­ச­கர், சஞ்­சீவ் சன்­யால் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

இக்­கூட்­டத்­திற்கு பின், மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, மத்­திய அர­சின் சீர்­தி­ருத்­தங்­கள் ஆகி­யவை, தாமஸ் ரூக்­மாக்­க­ரு­டன் பகிர்ந்து கொள்­ளப்­பட்­டன.அவர், ஜி.எஸ்.டி., செயல்­பா­டு­களில் உள்ள குறை­பா­டு­கள், வங்கி மோசடி உள்­ளிட்­டவை குறித்து, கேள்வி எழுப்­பி­னார்.

அதற்கு, ஜி.எஸ்.டி., நடை­மு­றை­களில், தற்­போது ஏற்­பட்­டுள்ள ஸ்தி­ரத்­தன்மை குறித்­தும், ‘இ – வே பில்’ மற்­றும் விலைப்­பட்­டி­யல் ஒப்­பீட்டு நடை­மு­றை­கள் அம­லா­னால், வரு­வாய், அடுத்த, 7 –- 8 மாதங்­களில் உய­ரும் என, தெரி­விக்­கப்­பட்­டது.

வருவாய்

நடப்பு நிதி­யாண்­டில், ஜி.எஸ்.டி., மூலம், 11 மாத வரு­வாய் மட்­டுமே கிடைக்­கும் என்ற போதி­லும், நிதிப் பற்­றாக்­கு­றையை, 3.5 சத­வீ­த­மாக கட்­டுப்­ப­டுத்த எடுத்த முயற்­சி­கள் குறித்­தும், ஜி.எஸ்.டி.,யால், வரி செலுத்­து­வோர் எண்­ணிக்கை பெருகி இருப்­ப­தும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.வங்கி மோச­டி­கள் கார­ண­மாக, பொதுத் துறை வங்­கி­களை, தனி­யார் மய­மாக்­கும் திட்­டம் எது­வும், தற்­போது இல்லை என, தெரி­விக்­கப்­பட்­டது.

நிதி ஒதுக்­கீ­டு­களை குறைத்து, சிக்­க­னத்தை கடை­பி­டித்­தால், அது, பண­வீக்க உயர்­வுக்கு வழி­வ­குக்­கும். இதை தவிர்க்க, நிதி ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு உள்ளன.நிதி பொறுப்பு மற்­றும் பட்­ஜெட் நிர்­வாக சட்­டத்­தி­ருத்த மசோதா, நடப்பு, பார்லி., கூட்­டத்­தொ­ட­ரில் நிறை­வேற்­றப்­பட உள்­ளது.

இது, வரும் நிதி­யாண்­டில், நிதிப் பற்­றாக்­கு­றையை, 3.3 சத­வீ­தம்; 2019 – -20ல், 3.1 சத­வீ­தம்; 2020 – -21ல், 3 சத­வீ­த­மாக குறைக்க உத­வும் என, தாமஸ் ரூக்­மாக்­க­ருக்கு விளக்­கப்­பட்­டது. இந்த புள்ளி விப­ரங்­க­ளின்­படி, இந்­தி­யா­வின் தரக் குறி­யீடு உயர்த்­தப்­ப­டுமா என்­பது, விரை­வில் தெரி­ய­வ­ரும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)