பதிவு செய்த நாள்
10 மார்2018
00:28
புதுடில்லி:‘‘ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், 1.03 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,’’ என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, பார்லி.,யில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:நடப்பு மார்ச், 2 நிலவரப்படி, ஜி.எஸ்.டி.,யில், 1 கோடியே, 3 லட்சத்து, 99 ஆயிரத்து, 305 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில், 64.42 லட்சம் நிறுவனங்கள், முந்தைய வரி நடைமுறையில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறியுள்ளன. புதிதாக, 39.56 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளன.ஜி.எஸ்.டி., நடைமுறையில் சிக்கல்கள் குறைந்து, சுமுக சூழல் உருவாகி வருகிறது. வரி செலுத்துவோர், 1800 1200 232 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலம், ஜி.எஸ்.டி., சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். மேலும், cbecmitra.helpdesk@icegate.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தீர்வு காணலாம். இவை தவிர, சாப்ட்வேர் தொடர்பான சந்தேகங்களுக்கு, பிரத்யேக சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, 0120 4888999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|