பதிவு செய்த நாள்
10 மார்2018
00:33
புதுடில்லி:‘பொதுத் துறை வங்கி மோசடிகளுக்கு, வங்கி அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கூட்டணி அமைத்து செயல்படுவதுதான், முக்கிய காரணம்’ என, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடியை தடுக்கும் வழி குறித்து, இந்நிறுவனம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:ஆய்வில் பங்கேற்ற, 97 சதவீதம் பேர், ‘ரிசர்வ் வங்கி, இம்மாத இறுதிக்குள், அனைத்து பொதுத் துறை வங்கி இயக்குனர் குழுவிடம் இருந்து, தற்போதைய வங்கி நிதி நிலவரம், வங்கிகள் ஒப்புதல் அளித்த இடர்ப்பாட்டுக்குரிய கடன் பொறுப்பு கடிதங்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டு பெற வேண்டும்.
‘இந்த விபரங்களுக்கு, வங்கிகள் முழு பொறுப்பேற்க வேண்டும்’ என, கூறியுள்ளனர்.வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் சேர்ந்து, வங்கியில் மோசடி செய்வதாக, 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.கடுமையான கண்காணிப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என, 52 சதவீதத்தினரும், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என, 32 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
வங்கித் துறையில் அனுபவம் வாய்ந்த வெளியாரை, பொதுத் துறை வங்கிகளின், மூத்த பொறுப்பிலும், இயக்குனர் குழுவிலும் அமர்த்தலாம் என, 13 சதவீதத்தினர் யோசனை தெரிவித்துள்ளனர்.வெளி நிறுவனங்கள் மூலம், வங்கிகளில் கணக்கு தணிக்கை, கடன் நிலவரம் உள்ளிட்டவற்றை அவ்வப்போது ஆய்வு செய்தால், மோசடி தடுக்கப்படும் என, 89 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மோசடி செய்தோர் வெளிநாட்டுக்கு ஓடுவதை தடுக்க, வாராக் கடன்பட்டியலில் உள்ளோரின் பாஸ்போர்ட்டை, பிணையாக பெறலாம். வெளிநாடு போகும்போது, அவரின் கடன் நிலவரத்தின் அடிப்படையில், பாஸ்போர்ட் வழங்கலாம் என, 67 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|