பதிவு செய்த நாள்
11 மார்2018
00:16
புதுடில்லி:‘‘இந்திய நிறுவனங்கள், உலக தரத்தில் மின் சாதனங்களை தயாரிக்க வேண்டும்,’’ என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
அவர், நொய்டாவில், ‘எலக்ரமா’ கருத்தரங்கில் பேசியதாவது:மின் சாதன நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக, இறக்குமதியாகும் மின் சாதனங்கள் உள்ளன. இப்போட்டியை சமாளிக்கும் வகையில், உலக தரத்தில் மின் சாதனங்களை தயாரிக்க வேண்டும். அதற்கான ஆற்றல், இந்திய நிறுவனங்களுக்கு உள்ளது.
இந்தியா, மிகச் சிறந்த, தரமான மின் சாதனங்களை தயாரிக்கும் நாடு என்ற சிறப்பை பெறும். நிறுவனங்கள், எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினால், உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும் என்பதுடன், செலவினங்களும் குறையும்.மின் உற்பத்தி, பகிர்மானம், வினியோகம் மற்றும் அது சார்ந்த துறைகளில், மின் சாதனங்களின் தேவை, இன்றியமையாததாக உள்ளது.
மின் சாதன துறையில், நேரடியாக, 5 லட்சம் பேரும், மறைமுகமாக, 10 லட்சம் பேரும், வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இத்துறையில், அனைத்து பிரிவுகளையும் சேர்த்து, 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|