பதிவு செய்த நாள்
11 மார்2018
00:18
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளுக்கு, ‘50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோரின் பாஸ்போர்ட் விபரங்களை கட்டாயம் பெற வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜதின் மேத்தா உள்ளிட்டோர், வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்களை வரவழைத்து, கடனை வசூலிக்க முடியாமல், சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் திணறி வருகின்றன.இதன் காரணமாக, பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க, புதிய வியூகத்தை, மத்திய அரசு வகுத்துள்ளது.
அதன்படி, இனி, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோரின் பாஸ்போர்ட் விபரங்களை, கட்டாயம் பெற வேண்டும் என, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.மேலும், தற்போது, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ள, அனைவரது பாஸ்போர்ட் விபரங்களையும், உடனடியாக பெறுமாறு, பொதுத் துறை வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.பாஸ்போர்ட் விபரங்களை சேகரிக்கும் பணியை, 45 நாட்களுக்குள் முடிக்குமாறும், பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன.
பாஸ்போர்ட் இல்லாத கடனாளிகளிடம் இருந்து, ‘பாஸ்போர்ட் இல்லை’ என சான்று பெறவும், வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இத்துடன், 50 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடன்களில், சரி வர வசூலாகாத அல்லது மோசடிக்கான அறிகுறிகள் தென்பட்டால், புலனாய்வு அமைப்புகளிடம், உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, பொதுத் துறை வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
தேடப்படும் பொருளாதார குற்றவாளிகள் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|