பதிவு செய்த நாள்
13 மார்2018
00:45
புதுடில்லி:ஏற்றுமதியாளர்களின், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், நாடு முழுவதும், சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.‘வரும், 15ல் துவங்கி, 29 வரை நடைபெறும் இந்த முகாம்களை அணுகி, செலுத்திய வரியை திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்னைகளுக்கு, ஏற்றுமதியாளர்கள் தீர்வு காணலாம்’ என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.
ஏற்றுமதியாளர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்கின்றனர்.இத்தகையோர், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, 0.1 சதவீதம் வரி செலுத்துகின்றனர். பின், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து, அது தொடர்பான ஆவணங்களை அளித்து, இறக்குமதியின் போது செலுத்திய, 0.1 சதவீத வரியை திரும்பப் பெறுகின்றனர்.இது தவிர, ஏ.ஏ., இ.பி.சி.ஜி., மற்றும், இ.ஓ.யு., திட்டங்களின் கீழ், உள்நாட்டில் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு செலுத்தும், ஜி.எஸ்.டி., அல்லது, ஐ.ஜி.எஸ்.டி.,யும், சப்ளையர்கள் அல்லது ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது.
இந்த வகையில், மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்திய வரி மற்றும் ஏற்றுமதியின் போது, துறைமுகங்களில் செலுத்திய வரி விபரங்களை, ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்றும், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படிவங்களில் தாக்கல் செய்கின்றனர்.
இந்த படிவங்களில் உள்ள விபரங்கள், ஒன்றுக்கு ஒன்று பொருந்தும் பட்சத்தில், ஏற்றுமதி செய்த ஒரு வாரத்தில், செலுத்திய வரியில், 90 சதவீதத்தை, ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெறலாம்.கணக்கு தாக்கலில் பிழைகள் அல்லது தவறுகள் இருந்தால், ‘ரீபண்டு’ வழங்குவது தாமதமாகும். இதற்கு, வரியை கணக்கிடுவதிலும், ஜி.எஸ்.டி., நடைமுறை சிக்கலும் கூட, ஒருவகையில் காரணம் எனலாம்.இந்த தாமதத்தால், ஏற்றுமதியாளர்கள், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், வனஜா சர்னா கூறியதாவது:நாடு முழுவதும், 15 – 29 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில், ஏற்றுமதியாளர்கள், ‘ரீபண்டு’ பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். அவர்களின் கணக்கு தாக்கலில் உள்ள தவறுகளை சரிசெய்ய, அதிகாரிகள் உதவுவர். இம்மாத இறுதிக்குள், பெரும்பான்மை ஏற்றுமதியாளர்களுக்கு, நிலுவை கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நீட்டிப்பு
ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய தொகையில், இதுவரை, 5,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும், 70 சதவீத தொகை, எட்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது. ஏற்றுமதியாளர்கள், வரியை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் கால வரம்பு, அக்., வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ‘இ – வாலட்’ மூலம், ‘ரீபண்டு’ அளிக்கும் வசதி, அக்டோபரில் அமலுக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|