பதிவு செய்த நாள்
16 மார்2018
00:50
மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை, கணிசமாக குறைந்துள்ளது.
‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல், கோடை துவங்கும் முன்பே, காய்கறிகளின் விலை உச்சத்தை தொடுவது வழக்கம்.ஆனால், 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, தற்போது காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதே போல், உணவு தானிய விலையும், கணிசமாக குறைந்துள்ளது.
கடந்தாண்டுகளில், 1 கிலோ முருங்கைக்காய், 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 20 ரூபாய்க்கு குறைந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகளின் விலை, கிலோ, 10 – 20 ரூபாய் வரையிலேயே விற்கப்படுகின்றன.
‘மக்களிடையே வாங்கும் திறன் குறைந்ததாலேயே, விலை வீழ்ச்சியடைந்து உள்ளது’ என, கோயம்பேடு காய்கறி சந்தை விற்பனையாளர்களின் ஆலோசகர், சவுந்திரராசன் கூறினார்.
அவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டு கால வரலாற்றில்,இந்தளவுக்கு விலை வீழ்ச்சியடைந்ததில்லை. பொதுவாக, கோடை காலத்தில், காய்கறி விலை உயரும். ஆனால், இந்தாண்டு விலை குறைந்துள்ளது.விளைச்சல் அதிகரிப்பால், தற்போது விலை குறைந்தது என்பது சரியான காரணம் அல்ல. மக்களிடையே வாங்கும் திறன் குறைந்ததாலேயே, இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|