கருப்பட்டி காய்ச்ச பயிற்சிகருப்பட்டி காய்ச்ச பயிற்சி ... 15 லட்சம் ஏர்செல் சந்தாதாரர்களை வளைத்தது பார்தி ஏர்டெல் நிறுவனம் 15 லட்சம் ஏர்செல் சந்தாதாரர்களை வளைத்தது பார்தி ஏர்டெல் நிறுவனம் ...
வருவாயை உயர்த்த ஜவுளி துறை முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2018
00:16

கோயம்புத்துார்: மத்திய அரசு, அடுத்த ஏழு ஆண்டுகளில், ஜவுளி துறை வருவாயை, இரு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, ஜவுளி துறை ஆணையர், கவிதா குப்தா கூறியதாவது: ஜவுளி துறையின் வருவாய், தற்போது, 15 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இதில், உள்நாட்டின் மொத்த ஜவுளி விற்பனை மூலம், 11ஆயிரம் கோடி டாலர் கிடைக்கிறது. ஜவுளி ஏற்றுமதி வாயிலாக, 4,000 கோடி டாலர் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில், ஜவுளி துறை வருவாயை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும், 2025ல், ஜவுளி துறை வருவாயை, 30 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, 19.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இந்த இலக்கை எட்ட, ஜவுளி துறையினர், பருத்தி மற்றும் செயற்கை ஜவுளி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது, ஆண்டுக்கு, பருத்தி ஜவுளி மற்றும் செயற்கை ஜவுளி உற்பத்தி, முறையே, 650 கோடி கிலோ மற்றும், 250 கோடி கிலோவாக உள்ளது. இது, இரு மடங்கு உயர்த்தப்பட வேண்டும். உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம், நாம், 800 கோடி கிலோ பருத்தி ஜவுளியை தயாரிக்க முடியும். எஞ்சியதை, செயற்கை ஜவுளி மூலம் பூர்த்தி செய்யலாம். சர்வதேச ஜவுளி உற்பத்தியில், பருத்தி ஜவுளியின் பங்கு, 30 சதவீதம்; செயற்கை ஜவுளியின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் பருத்தி ஜவுளியின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது.ஆயத்த ஆடைகள் மற்றும் வீடு – வர்த்தக பயன்பாட்டிற்கான ஜவுளிகள் துறையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு வரவேற்பு பெருகி வருவதால், முதலீடு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
2.50 லட்சம் பேருக்கு வேலை : மத்திய அரசு, 2016, ஜூனில், ஜவுளி துறைக்கு, 6,000 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது. அது முதல், ஆடை மற்றும் வீடு – வர்த்தக ஜவுளிகள் பயன்பாட்டு துறையில், புதிதாக, 2.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)