பதிவு செய்த நாள்
23 மார்2018
02:31
சென்னை : மீன்பிடி தடையை முன்கூட்டியே துவக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்வரத்து குறைந்துள்ளதால், வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன் வகைகளின் விலை எகிறியுள்ளது. சில்லரை விற்பனையில், 1 கிலோ வஞ்சிரம், 500 – 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏரிகளில் வளர்க்கப்படும் கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள், ஒரு கிலோ, 100 -– 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெயில் ஆரம்பித்துள்ளதால், கருவாடு தயாரிப்பு பணிகள் மும்முரமாகியுள்ளன.
விரைவில் மீன்பிடி தடை காலம் துவங்குவதால், காசிமேடு, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில், மீன்களை கருவாட்டுக்காக பதப்படுத்தும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே மீன்பிடி தடையை ஒரு மாதத்திற்கு முன்னதாக துவக்க வேண்டும் என, மீனவர்கள் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, மீன்வளம் குறைந்து வருகிறது. கடல்நீர் மாசு காரணமாகவும், அண்டை மாநிலத்தோடு இணைந்த மீன்பிடி தடை காலம் இல்லாததாலும், மீன்வளம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆந்திரா, கேரளா, தமிழகம் என, மூன்று மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மீன்பிடி தடையை அமல்படுத்தி, கடல் மாசுவை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|