பதிவு செய்த நாள்
23 மார்2018
02:33
புதுடில்லி |: இந்தாண்டு, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீட்டு மதிப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.
இது குறித்து, கேப்பிடலைன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த, 53 நிறுவன பங்குகளில், எல்.ஐ.சி., செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சியால், மதிப்பு சரிவடைந்து உள்ளது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மேற்கொண்ட முதலீட்டில் தான், எல்.ஐ.சி.,யின் பங்கு மதிப்பு, அதிகபட்சமாக, 5,500 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதே காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், எல்.ஐ.சி., செய்திருந்த பங்கு முதலீட்டின் மதிப்பு, 2,500 ரூபாய் வரை குறைந்துள்ளது. பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, பொதுத் துறை நிறுவனங்களில், 10ல், 9 நிறுவனங்களின் பங்கு மூலதன மதிப்பு, 40 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரவ் மோடி மோசடி, திவால் நடவடிக்கை போன்ற பல்வேறு காரணங்களால், பொதுத் துறை மட்டுமின்றி தனியார் துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|