பதிவு செய்த நாள்
23 மார்2018
02:35
மும்பை : ‘இந்தியாவில், உள்நாட்டு காய்கறி விதைகள் சந்தை, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இரு மடங்கு உயர்ந்து, 8,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தேவைக்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அதிக அளவில் உணவுடன் காய்கறிகளை சேர்த்துக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், காய்கறிகள் உற்பத்தி, 35 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப, காய்கறி விதைகளுக்கான தேவையும் உயரும்.
தற்போது, உள்நாட்டு காய்கறி விதைகள் சந்தை மதிப்பு, 4,000 கோடி ரூபாயாக உள்ளது. இது, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இரு மடங்கு உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி, காய்கறி பயிர் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதனால், காய்கறி உற்பத்தி உயரும். இதில், கலப்பு விதைகள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறி வகைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|