எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’எஸ்.பி.ஐ., காசோலைக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு 31 வரை, ‘கெடு’ ... பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம் பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம் ...
‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
02:38

மும்பை : ‘‘நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, சேவை­கள் துறை­யில், 12 முக்­கிய பிரி­வு­களை ஊக்­கு­விக்க, அரசு திட்­ட­மிட்­டுள்­ளது,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­து உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: சில மாதங்­க­ளாக, நாட்­டின் ஏற்­று­மதி உயர்ந்து வரு­கிறது. பாரம்­ப­ரிய சரக்­கு­கள் மட்­டு­மின்றி, புதிய பொருட்­களும் ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்­டும் என, அரசு விரும்­பு­கிறது. இதை­யொட்டி, சேவை­கள் துறை­யில், ஊக்­கு­விப்பு திட்­டத்­திற்­காக, 12 முக்­கிய பிரி­வு­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

மத்­திய அரசு ஏற்­க­னவே சேவை­கள் துறை­யைச் சேர்ந்த, சுற்­றுலா, ஓட்­டல், தக­வல் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட, 12 பிரி­வு­கள் வளர்ச்­சிக்­கான, 5,000 கோடி ரூபாய் திட்­டத்­திற்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதன்­படி, ஒவ்­வொரு சேவைப் பிரி­வும், உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு வர்த்­த­கத்­தில் வளர்ச்சி காண, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, சேவை­கள் துறை, குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கு­கிறது. சேவை­கள் துறை, சர்­வ­தேச தரத்­தில் சேவை­களை வழங்­கு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்.ரசா­ய­னத் துறை, மிகச் சிறந்த வளர்ச்சி வாய்ப்பை கொண்­டுள்­ளது. ஏற்­று­மதி தேவையை பூர்த்தி செய்­யக் கூடிய ஆற்­றல், இத்­து­றைக்கு உள்­ளது. இது­போல, வளர்ச்சி கண்டு வரும் துறை­களை ஊக்­கு­வித்து, ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, அடுத்த சில மாதங்­களில், புதிய தொழில் கொள்கை வெளி­யி­டப்­படும்.

வேளாண் ஏற்­று­மதி கொள்­கை­யும், பொது கருத்­துக்கு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. வேளாண் சந்­தை­களில் இருந்து விளை­ப்பொ­ருட்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கு, சரக்கு விமான கொள்­கையை, விமான போக்­கு­வ­ரத்து அமைச்­ச­கம் உரு­வாக்கி வரு­கிறது. இத்­திட்­டத்­தில் முத­லீடு செய்ய, சவுதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் ஆகி­யவை ஆர்­வ­மாக உள்­ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)