பதிவு செய்த நாள்
23 மார்2018
15:57
மும்பை : சர்வதே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழச்சியை சந்தித்துள்ளன. கடுமையான வீழ்ச்சியுடன் இந்த வார வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் சரிந்து 32,596.54 புள்ளிகளாகவும், நிப்டி 116.75 புள்ளிகள் சரிந்து 9998.05 புள்ளிகளாகவும் இருந்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 33,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 10,000 புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளது முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் பெரும்பாலான நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்படுகின்றன. ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்துள்ளன. பகல் நேர வர்த்தகத்தின் போது நிப்டி 300 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|