மடக்கும் தன்மை கொண்ட ஐபோன் தயாரிக்கிறது ஆப்பிள்மடக்கும் தன்மை கொண்ட ஐபோன் தயாரிக்கிறது ஆப்பிள் ... 'இ - வே' பில் அறிமுகத்தில் மாற்றமில்லை  கணக்கு தாக்கலுக்கு ஜூன் வரை அவகாசம் 'இ - வே' பில் அறிமுகத்தில் மாற்றமில்லை கணக்கு தாக்கலுக்கு ஜூன் வரை ... ...
எகிறியது சாமந்தி விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2018
00:53

சென்னை : கோயம்பேடு மலர் சந்தையில், சாமந்தி வரத்து குறைந்ததால், ஒரு கிலோ, 200 - 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ரோஜா வகைகள், ஒரு கிலோ, 100 - 140 ரூபாய் வரையிலும், அரளி ஒரு பை, 100 ரூபாய்க்கும், மல்லி ஒரு கிலோ, 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. அடுத்த ஒரு வாரத்தில், சாமந்தி வரத்து படிப்படியாக குறைந்து விடும் என, வியாபாரிகள் கூறினர். தற்போது கனகாம்பரம் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ, 300 ரூபாயிலிருந்து, 200 ரூபாய் வரை குறைந்துள்ளது.
வாழை வரத்து அதிகரிப்பு
ஆந்திராவில் இருந்து வாழை வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில், பச்சை வாழை ஒரு தார், 100 ரூபாய்க்கு குறைந்துள்ளது. எலக்கி வாழை கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு தார், 400 ரூபாயாக விற்கப்பட்டது; தற்போது, 200 ரூபாய்க்கு குறைந்துள்ளது. செவ்வாழை ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு குறைந்துள்ளது. வாழைக்காய் ஒன்று, 3 - 5 ரூபாய் வரை விற்பனையாகிறது.
துவங்கியது மாங்காய் சீசன்
கோயம்பேடு சந்தையில், மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. தற்போது திருவள்ளூர் சுற்றுவட்டாரத்திலிருந்து, கிளிமூக்கு மாங்காய், கொம்பு மாங்காய், வடு மாங்காய் வரத் துவங்கியுள்ளது. தற்போது ஒரு கிலோ, 30 - 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்த சில வாரத்தில், வரத்து மேலும் அதிகமாகி, விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் கூறினர்.
பற்றாக்குறை இல்லை
சென்னையில் காய்கறியை பொருத்தவரை, பற்றாக்குறை இல்லாத அளவுக்கு வரத்தும், விற்பனையும் உள்ளதாக, வியாபாரிகள் கூறினர். தற்போது பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, சுரைக்காய், சேனைக்கிழங்கு, கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட, அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை, ஒரு கிலோ, 8 - 25 ரூபாய் விற்பனையாகிறது. பற்றாக்குறை இல்லாத அளவுக்கு, காய்கறி வரத்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)