எகிறியது சாமந்தி விலைஎகிறியது சாமந்தி விலை ... '4 பொது துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை' '4 பொது துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை' ...
'இ - வே' பில் அறிமுகத்தில் மாற்றமில்லை கணக்கு தாக்கலுக்கு ஜூன் வரை அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2018
00:54

புதுடில்லி: திட்டமிட்டபடி, ஏப்., 1ல், சரக்கு போக்குவரத்துக்கான, 'இ - வே' பில் அமலுக்கு வரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 10ம் தேதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஏப்., 1 முதல் மீண்டும், 'இ - வே' பில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டது.வணிகர்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட மதிப்பில் அனுப்பும் சரக்குகளுக்கு, 'இ - வே' பில் அவசியமாகும்.இதை, சரக்கு போக்குவரத்தில், வரி அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது காட்ட வேண்டும். இதன் மூலம், சரக்கு போக்குவரத்தில் நடைபெறும் வரி ஏய்ப்புகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முதற்கட்டமாக, மாநிலங்கள் இடையிலான சரக்கு போக்குவரத்தில், இத்திட்டம் அமலாகும். அதன் பின், ஏப்., 15ல், மாநிலங்களுக்குள் நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கும் விரிவுபடுத்தப்படும். ஜூன் 1க்குள், நாடு முழுவதும், 'இ - வே' பில் முழுமையான செயல்பாட்டிற்கு வந்து விடும்.இக்கூட்டத்தில், நடப்பு, 2017- - 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கான கெடுவை, மார்ச், 31லிருந்து, ஜூன் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், 'இ - வே' பில் நடைமுறை, ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்., 1ல் அமலுக்கு வருவதாக, நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், 'ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் தொடர்பாக ஏற்கனவே அறிவித்த அவகாச காலத்திலும் மாற்றம் ஏதும் இல்லை' என, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் கூறிஉள்ளது.அதனால், நிறுவனங்கள், அவற்றின் விற்பனை விபரங்களை, 'ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி' படிவத்திலும், இறுதி கணக்கு விபரங்களை, 'ஜி.எஸ்.டி.ஆர்., - 1' படிவத்திலும், ஜூன் இறுதி வரை தாக்கல் செய்யலாம்.
ஒரே படிவம் : சுஷில் குமார் மோடி தலைமையிலான, ஜி.எஸ்.டி., செயலாக்கக் குழு, வரி ஏய்ப்பை தடுக்கும் அம்சங்களுடன், ஒரே படிவத்தில் சுலபமாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)