பதிவு செய்த நாள்
27 மார்2018
04:00
சென்னை : தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. 2015 – 16ம் ஆண்டை விட, 2016 – 17ம் ஆண்டு, 9.86 கோடி ரூபாய், லாபம் கூடுதலாக கிடைத்துள்ளது.
தமிழ்நாடு உப்பு நிறுவனம், ரசாயனத்திற்கு தேவையான உப்பையும், உணவிற்கு தேவையான உப்பையும், உற்பத்தி செய்து வருகிறது. அயோடின் செறிவூட்டப்பட்ட, கல் உப்பு மற்றும் துாள் உப்பு உற்பத்தி செய்து, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் வழியே, விற்பனை செய்து வருகிறது.
அத்துடன் இரும்புச் சத்து மற்றும் அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பை, எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தில், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. வெளிச்சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனம், 2016ல், 37.50 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியது. கடந்த ஆண்டு, 47.36 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஉள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு, இருவித சத்து செறிவூட்டப்பட்ட உப்பு உற்பத்தியை அதிகரித்து, சத்துணவு மையங்கள் மற்றும் தேவைப்படுகிற விற்பனை மையங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது என, கூடுதல் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 2016 – 17ம் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|