பதிவு செய்த நாள்
27 மார்2018
04:03
புதுடில்லி : ‘ஏசி’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘வோல்டாஸ், டைகின், பானாசோனிக்’ உள்ளிட்ட நிறுவனங்கள், கோடை கால விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சி காண, தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
கோடை காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ‘ஏசி’ வாங்குவதில் நுகர்வோர் அதிகம் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, வோல்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரதீப் பக் ஷி கூறுகையில், ‘‘நுகர்வோரிடம் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளதால், கோடையில், அதிகளவில், ‘ஏசி’ விற்பனையாகும் என, எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.
பானாசோனிக் நிறுவனத்தின், ‘ஏசி’ வணிக பிரிவின் தலைவர், கவுரவ் ஷா கூறுகையில், ‘‘மற்ற பிராந்தியங்களை காட்டிலும், வடக்கு பிராந்தியத்தில், ‘ஏசி’ விற்பனையை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளோம்,’’ என்றார்.
‘‘சீனாவின், 60 சதவீத, ‘ஏசி’ பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது, இந்தியா, 4 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்தங்கியுள்ளது. அதனால், ‘ஏசி’ நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சந்தையாக, இந்தியா உள்ளது,’’ என, கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின், செயல் துணைத் தலைவர், கமல் நந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|