பதிவு செய்த நாள்
27 மார்2018
04:04
புதுடில்லி, : ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2025ல், 5 லட்சம் கோடி டாலராக உயரும்,’’ என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத்தரங்கில் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தற்போது, 2.5 லட்சம் கோடி டாலராக உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் துறை ஆகியவற்றை மேம்படுத்தவும், அடிப்படை கட்டமைப்பு துறையில், முதலீடுகளை அதிகரிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 – -8 சதவீதமாக உயரும் என்பதில் ஐயமில்லை. பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகளில், அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்ந்தால், 7 – -8 ஆண்டுகளில் தேவைகள் பெருகும். இதன் மூலம், 2025ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரு மடங்கு உயர்ந்து, 5 லட்சம் கோடி டாலரை எட்டும். பணவீக்கமும், ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் உள்ளதால், வளர்ச்சி குறித்த மதிப்பீடு சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|