பதிவு செய்த நாள்
27 மார்2018
04:06
புதுடில்லி : நிறுவன பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, பெரும்பாலான நிறுவனங்களின், 37 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வங்கி டிபாசிட், கோரப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல நிறுவனங்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்காக, பெயரளவில் பதிவு செய்யப்படுகின்றன. இத்துடன், ஆண்டு வரவு -– செலவு கணக்கை தாக்கல் செய்யாமலும், செயல்படாமலும் பல நிறுவனங்கள் உள்ளன. இதுபோன்ற பல காரணங்களால், 2.97 லட்சம் நிறுவனங்களின் பதிவை, நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகம் நீக்கியுள்ளது.
இதையடுத்து, முறையாக கணக்கு விபரங்களை அளித்து, பதிவை புதுப்பித்துக் கொள்ள, 60 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே முன்வந்துள்ளன. எஞ்சிய நிறுவனங்கள், கணக்கு விபரங்களை காட்டினால், சொத்து குறித்த கேள்வி எழும் என, அமைதியாக உள்ளன.
இந்த வகையில், 2.37 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்கில், 37 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கோரப்படாமல் முடங்கி உள்ளது. வங்கியில் கோரப்படாத டிபாசிட் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கறுப்பு பணச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|