பதிவு செய்த நாள்
28 மார்2018
00:44
புதுடில்லி : ‘‘ஜூன் மாதத்தில், ‘5ஜி’ தொழில்நுட்பத்துக்கான முழு திட்டமும் தயாராகிவிடும்,’’ என, தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: நாட்டை, ‘டிஜிட்டல்’ மயமாக்குவதற்கு, ‘5ஜி’ தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முழு செயல் திட்டமும், ஜூன் மாதம் தயாராகி விடும்.
தொழிற்துறையினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் துறையினருடன் இணைந்து, ‘5ஜி’ தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்க பணியாற்றி வருகிறது, அரசு. ஏற்றுமதியாளர்கள், துறை வல்லுனர்கள். ஐ.ஐ.டி., – ஐ.ஐ.சி., போன்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஏற்கனவே வேலைகள் துவங்கி உள்ளன. ஜூன் மாதம், ‘5ஜி’ குறித்த முழு திட்டமும் தயாராகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|