பதிவு செய்த நாள்
28 மார்2018
00:45
சண்டிகர் : சீனாவைச் சேர்ந்த, ‘ஸ்மார்ட் போன்’ நிறுவனமான, ஜியோமி, இந்தியாவில், 100 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6,000 – 7,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், மனு குமார் ஜெயின் கூறியதாவது: நிறுவனம், 2017 வரை, 3,000 கோடி ரூபாயை, இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள, 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6,000 – 7,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
கடந்த, 2017 வரை, இந்தியாவில், 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளோம். இந்த புதிய முதலீட்டின் மூலம், வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளை, மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். மிகக் குறுகிய காலத்திற்குள், ஸ்மார்ட் போன் சந்தையில், குறிப்பிடத்தக்க சந்தை பங்கைக் கைப்பற்ற, இந்தியா மிக முக்கிய காரணம். நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 750 மொபைல் போன் சேவை மையங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆராய்ச்சி நிறுவனமான, ஜி.எப்.கே., அறிக்கையின்படி, ஜனவரியில், சண்டிகரில், நேரடி விற்பனையில், 40.3 சதவீத பங்கை, ஜியோமி கைப்பற்றி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|