பதிவு செய்த நாள்
28 மார்2018
00:50
ஐதராபாத் : தற்போது, இந்திய வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கலாம் என, தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான, அசோசெம் யோசனை தெரிவித்துள்ளது.
அப்படி தனியார்மயமாக்கும் போது, அனைத்து தரப்பு ஒப்புதல்களுடன் அதை நிறைவேற்ற முனைய வேண்டும் எனவும், அசோசெம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து, இவ்வமைப்பின் பொதுச் செயலர், டி.எஸ்.ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதற்கட்டமாக பொதுத்துறை வங்கிகளில், அரசுக்கு இருக்கும், 80 சதவீதப் பங்குகளை, 50 சதவீதத்துக்கும் கீழாக குறைத்துக் கொள்ள வேண்டும். அரசின் பங்கானது, 50 சதவீதத்துக்கு கீழே வந்த அடுத்த நிமிடத்தில், வங்கிகள், சி.வி.சி., – சி.பி.ஐ., – சி.ஏ.ஜி., போன்றவற்றின் பிடிகளில் இருந்து வெளியேறும். வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு, அதிக சுயாட்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கும். அவர்கள் எந்தவித பயமும் இன்றி, கடன்களை வழங்குவதில் முடிவெடுப்பர்.
இன்னொரு பக்கம், நிர்வாக குழு மேலும் சிறப்பாக இயங்கும். செயல்சாரா இயக்குனர்கள் அதிக சுதந்திரத்துடன் செயல்படுவர். முடிவுகளை எடுக்க அவர்கள் நிதியமைச்சகத்தை எதிர்பார்க்க வேண்டியதிருக்காது. ரிசர்வ் வங்கி அதனளவிலான ஒழுங்குமுறைகளை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ளும். இருப்பினும், வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் கடுமையாக நடந்து கொள்ளாமல், அரசியல் தலைவர்களின் ஒப்புதலுடனும் செயலாற்ற வேண்டும். தனியார் மயமாவதால் கடன் வழங்குவது குறித்த விதிமுறைகள் நீர்த்துவிடும் என, யாரும் எண்ணும்படியாக செய்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|