பதிவு செய்த நாள்
30 மார்2018
01:58
கோயம்பேடு : சாம்பார் வெங்காயத்தின் விலை, 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 40 ரூபாயாக விற்கப்படுகிறது.
கோயம்பேடு காய்கறிச் சந்தையில், காய்கறி விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் சாம்பார் வெங்காயம், முந்தைய விலையை காட்டிலும், 10 ரூபாய் உயர்ந்து, 40 ரூபாயாக விற்கப்பட்டது. பட்டாணி 60 – 70 ரூபாயாக விற்பனையானது.
பெல்லாரி வெங்காயம், 15 – 20 ரூபாயாகவும், கேரட், 20; பீன்ஸ், 25; நுால்கோல், 18; பீட்ரூட், 10; வெண்டைக்காய், கோவக்காய், சேப்பங்கிழங்கு உள்ளிட்டவை, 25; அவரைக்காய், 20; முருங்கைக்காய், 25 – 30 ரூபாயாக விற்பனையானது.
கத்தரிக்காய், 1 கிலோ, 8 ரூபாயாக குறைந்துள்ளது. வரத்து தொடர்ந்து இருப்பதால், வாழைக்காய் ஒன்றின் விலை, 3 – 4 ரூபாயாக நீடிக்கிறது. முட்டைகோஸ், 4 – 5 ரூபாயாக ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|