பதிவு செய்த நாள்
30 மார்2018
01:59
புதுடில்லி : மத்திய அரசு, 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. தேவைக்கு அதிகமான இருப்பை குறைக்கவும், சர்க்கரை ஆலைகளுக்கு பண வரத்தை அதிகரிப்பதன் மூலமாக, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கிகள் கிடைப்பதற்கும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 13,899 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளன.அரசின், குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டு குறிக்கோளின் அடிப்படையில், ஆலைகள் அவற்றுக்கான ஒதுக்கீட்டு அளவை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அது விதிமுறையை மீறியதாகும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆலைக்கான ஏற்றுமதி ஒதுக்கீடு, ஆலைகளின் கடந்த இரண்டு ஆண்டு சராசரி உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.அரசு புள்ளிவிபரப்படி, ஆலைகள், உ.பி.,யில் விவசாயிகளுக்கு, 5,136 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 2,539 கோடி ரூபாயும், மஹாராஷ்ட்ராவில், 2,348 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருக்கின்றன.
நாட்டில் சர்க்கரை விலையை நிலைப்படுத்துவதற்காக மத்திய அரசு அண்மையில், இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதி வரியை நீக்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|