பதிவு செய்த நாள்
30 மார்2018
02:01
புதுடில்லி : காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘இரிடா,’ 24 மறுகாப்பீட்டு திட்டங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற, 25வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 24 மறு காப்பீட்டு திட்டங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த வரி விலக்கின் பயனை, காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
‘வரி விலக்கின் பயனை அளிக்காத பட்சத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் மீது, கொள்ளை லாப தடுப்பு சட்டம் பாயும்’ எனவும், ‘இரிடா’ எச்சரித்துள்ளது. இந்த வரி விலக்கால், ஜனஷ்ரீ பீமா யோஜனா, ஆம் ஆத்மி பினா யோஜனா, வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா, பிரதான் மந்திரி வய வந்தன் யோஜனா, ஹட் இன்சூரன்ஸ் ஸ்கீம் உள்ளிட்ட, 24 மறு காப்பீட்டு திட்டங்களின் பிரீமியம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|