பதிவு செய்த நாள்
30 மார்2018
02:05
சென்னை : சீனப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யாததால், உள்ளூரில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.
இது குறித்து, பாரிமுனை காசிசெட்டித் தெரு வியாபாரிகள் பட்டேல், ஆனந்த், பாபுலால், சாதிக் உள்ளிட்டவர்கள் கூறியதாவது: தற்போது, சீனப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டதை அடுத்து, அப்பொருட்களின் இறக்குமதி குறைந்து விட்டது. இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில், இந்திய தயாரிப்புகள் பரவலாகும். அதற்குள், சீன பொருட்கள் உற்பத்தியை இங்கு கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் எதிர்பார்ப்பு.ஜி.எஸ்.டி.,யால் பிளாஸ்டிக் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. தற்போது, சில பொருட்களின் வரியை, 28 சதவீதத்திலிருந்து, 18 மற்றும் 12 ஆக குறைத்து உள்ளனர்.
ஜி.எஸ்.டி., நடைமுறையை மேலும் எளிதாக்க வேண்டும். ரிட்டர்ன் வர வேண்டிய வகையில் பல லட்சங்கள் நிலுவையில் உள்ளதால், பலர் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர். நான்கு பேர் வரை வேலை பார்த்த சிறு, குறு நிறுவனங்களில், உரிமையாளர்களின் உறவினர்களே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|