பதிவு செய்த நாள்
30 மார்2018
02:07
மும்பை : ‘உள்நாட்டில், பருத்தி நுாலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், நுாற்பாலைகளின் லாபம் உயரும்’ என, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்றுமதி ஊக்குவிப்பு மானியங்களில் செய்துள்ள மாற்றங்கள்; ஜி.எஸ்.டி., நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை போன்றவற்றால், பருத்தி நுாலிழைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இத்துறை சார்ந்த, நுாற்பாலைகளின் லாபம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2017 அக்., – 2018 ஜன., வரையிலான காலத்தில், உள்நாட்டில், பருத்தி நுாலிழை தேவை, 14 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. உள்நாட்டில், அடுத்த ஆண்டு, பருத்தி விலை, 1 கிலோ, 115 ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருத்தி விலை அதிகரிப்பால், ஆறு மாதங்களாக, பருத்தி நுாற்பாலைகள், லாபத்தில் சரிவை சந்தித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|