‘பருத்தி நுாலிழை தேவை அதிகரிப்பால் நுாற்பாலைகள் லாபம் உயரும்’‘பருத்தி நுாலிழை தேவை அதிகரிப்பால் நுாற்பாலைகள் லாபம் உயரும்’ ... ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்... ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்... ...
‘முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2018
02:08

புதுடில்லி : ‘பங்­குச் சந்தை நிறு­வ­னங்­கள் மீது, முத­லீட்­டா­ளர்­கள் நேர­டி­யாக புகார் தெரி­விக்­கும் வசதி, ஆக., 1 முதல் அறி­மு­க­மா­கிறது’என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ தெரி­வித்­து உள்­ளது.

பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், பங்­குத் தரகு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் மீது புகார் தெரி­விக்க, ‘செபி,’ 2011 ஜூனில், ‘ஸ்கோர்ஸ்’ என்ற வலை­த­ளப் பிரிவை துவக்­கி­யது.எனி­னும், ‘முத­லீட்­டா­ளர்­கள், நேர­டி­யாக புகார் தெரி­வித்­தால், பிரச்­னைக்கு விரைந்து தீர்வு காண­லாம்’ என, பல நிறு­வ­னங்­கள் யோசனை தெரி­வித்­தன.

இதை ஏற்று, ‘செபி’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆக., 1 முதல் முத­லீட்­டா­ளர்­கள், நேர­டி­யாக நிறு­வ­னங்­க­ளி­டம் புகார் தெரி­விக்­கும் வசதி அறி­மு­க­மாக உள்­ளது. இதற்கு, முத­லீட்­டா­ளர்­கள், https:scores.gov.in வலை­தள பிரி­வில், தங்­களின் முழு விப­ரங்­க­ளை­யும் அளிக்க வேண்­டும். இதை­ய­டுத்து, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தனி அடை­யாள எண் மற்­றும் கட­வுச் சொல் வழங்­கப்­படும். அவற்றை பயன்­ப­டுத்தி, ‘ஸ்கோர்ஸ்’ வலை­த­ளத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் நேர­டி­யாக, பங்­குச் சந்தை நிறு­வ­னங்­கள், பங்­குத் தர­கர்­கள் மீது புகார் அளிக்­க­லாம்.

அவற்­றுக்கு, 30 நாட்­க­ளுக்­குள் தீர்வு காணா­வி­டில், புகார்­கள், ‘ஸ்கோர்ஸ்’ வலை­த­ளத்­தில் பதிவு செய்­யப்­படும்.முத­லீட்­டா­ளர்­களின் புகார்­களை நிறு­வ­னங்­கள் நிரா­க­ரித்­தால், அது குறித்து, மூன்று ஆண்­டு­க­ளுக்கு, ‘ஸ்கோர்ஸ்’ல் புகார் அளிக்­க­லாம்.

புகார் தொடர்­பாக நிறு­வ­னங்­கள் பதில் அளிக்க தவ­றி­னாலோ; அளித்த பதில் அல்­லது தீர்­வில் திருப்தி இல்­லை­யென்­றாலோ, முத­லீட்­டா­ளர்­கள், மூன்று ஆண்­டு­க­ளுக்­குள், ‘ஸ்கோர்ஸ்’ல் முறை­யி­ட­லாம். இப்­பு­கார்­கள் தொடர்­பாக, ‘செபி’ மேல் நட­வ­டிக்கை எடுக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)