பதிவு செய்த நாள்
30 மார்2018
02:08
புதுடில்லி : ‘பங்குச் சந்தை நிறுவனங்கள் மீது, முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கும் வசதி, ஆக., 1 முதல் அறிமுகமாகிறது’என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.
பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், பங்குத் தரகு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது புகார் தெரிவிக்க, ‘செபி,’ 2011 ஜூனில், ‘ஸ்கோர்ஸ்’ என்ற வலைதளப் பிரிவை துவக்கியது.எனினும், ‘முதலீட்டாளர்கள், நேரடியாக புகார் தெரிவித்தால், பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணலாம்’ என, பல நிறுவனங்கள் யோசனை தெரிவித்தன.
இதை ஏற்று, ‘செபி’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக., 1 முதல் முதலீட்டாளர்கள், நேரடியாக நிறுவனங்களிடம் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதற்கு, முதலீட்டாளர்கள், https:scores.gov.in வலைதள பிரிவில், தங்களின் முழு விபரங்களையும் அளிக்க வேண்டும். இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு தனி அடையாள எண் மற்றும் கடவுச் சொல் வழங்கப்படும். அவற்றை பயன்படுத்தி, ‘ஸ்கோர்ஸ்’ வலைதளத்தில், முதலீட்டாளர்கள் நேரடியாக, பங்குச் சந்தை நிறுவனங்கள், பங்குத் தரகர்கள் மீது புகார் அளிக்கலாம்.
அவற்றுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிடில், புகார்கள், ‘ஸ்கோர்ஸ்’ வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.முதலீட்டாளர்களின் புகார்களை நிறுவனங்கள் நிராகரித்தால், அது குறித்து, மூன்று ஆண்டுகளுக்கு, ‘ஸ்கோர்ஸ்’ல் புகார் அளிக்கலாம்.
புகார் தொடர்பாக நிறுவனங்கள் பதில் அளிக்க தவறினாலோ; அளித்த பதில் அல்லது தீர்வில் திருப்தி இல்லையென்றாலோ, முதலீட்டாளர்கள், மூன்று ஆண்டுகளுக்குள், ‘ஸ்கோர்ஸ்’ல் முறையிடலாம். இப்புகார்கள் தொடர்பாக, ‘செபி’ மேல் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|