பதிவு செய்த நாள்
01 ஏப்2018
05:04
புதுடில்லி : சி.எப்.எச்., எனப்படும், கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக, கனரா வங்கி அறிவித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, கனரா வங்கியின் துணை நிறுவனமாக, வீட்டு வசதி கடன் வழங்கும், சி.எப்.எச்., உள்ளது. இந்நிறுவனத்தின், 30.44 சதவீத பங்குகள், கனரா வங்கி வசம் உள்ளன. இதில், 4 சதவீத பங்கை, வணிக வங்கிகள் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக, 2017, டிசம்பரில், கனரா வங்கி அறிவித்தது. இதையடுத்து, வணிக வங்கிகள், சி.எப்.எச்., பங்கு விலையை, கனரா வங்கியிடம் தெரிவித்தன. இந்நிலையில், இந்தாண்டு, ஜன., 10ல், ‘பங்குகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை’ எனக் கூறி, விற்பனை செய்ய கனரா வங்கி மறுத்துவிட்டது. அதேசமயம், சி.எப்.எச்.,சில் கொண்டுள்ள அனைத்து பங்குகளையும், கனரா வங்கி விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, எச்.டி.எப்.சி., நிறுவனம், சி.எப்.எச்.,சின், 30 சதவீத பங்குகளை வாங்க முன்வந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் மறைமுக பேச்சு நடந்து வந்தது.சில தினங்களுக்கு முன், எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் துணைத் தலைவர், கேகி மிஸ்திரி அளித்த பேட்டியில், ‘இரு வாரங்களுக்கு முன், கனரா வங்கியிடம், பங்கு விலையை குறிப்பிட்டதாகவும், அதற்கு பதில் கிடைக்காததால், பங்கு விலையில் மாற்றம் செய்து மீண்டும் தெரிவிக்கவில்லை’ எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், கனரா வங்கி, பங்குச் சந்தைகளுக்கு ஓர் அறிக்கை அனுப்பியுள்ளது.அதில், சி.எப்.எச்., நிறுவனத்தில் கொண்டுள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி, பங்கு விற்பனை திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|